கல்லூரி மாணவி உயிரிழப்பால் மாணவர்கள் போராட்டம்- வீடியோ

  • 7 years ago
பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி காய்ச்சலின் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு…

கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் கோவையை சேர்ந்த ஜனனி என்ற மாணவி விடுதியில் தங்கி இரண்டாம் வருடம் படித்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் நேற்று அவருக்கு வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகம் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் காலம் தாழ்த்தியதால் அவர் உயிரிழந்ததாக கூறி கல்லூரிமுன் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Dis : The students were stunned because the college management did not find it difficult to stay away from a second year student's stay in the college of engineering college.

Recommended