நானும் டோணியும் நண்பேன்டா... எங்களை யாராலும் பிரிக்க முடியாது - கோஹ்லி!

  • 7 years ago
என்னையும், டோணியையும் பலர் பிரிக்க முயன்றார்கள், இப்போதும் கூட அந்த முயற்சி நடந்து வருகிறது என்று கோஹ்லி கூறியுள்ளார். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
அப்போது அவர் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக மிகவும் பக்குவமாக பேசினார். அதன்பின் நடந்த ''காபி வித் சாம்பியன்ஸ்'' என்ற நிகழ்வில் கோஹ்லி மிக முக்கியமான விஷயங்கள் பலவற்றை பேசினார். அப்போது அவர் தனக்கும் டோணிக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து மனம் திறந்தார் கோஹ்லி.

ராஜ்கோட்டில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, "இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த போட்டியில் சரியாக விளையாட வில்லை. இது எங்களுடைய தவறுதான்" என்று கூறினார்.

Indian team captain Virat Kohli open up his relationship about Dhoni. In 'Coffee with Champions' tv show he said ''Nobody can affect my relationship with MS Dhoni'' which later got viral in social media.

Recommended