சென்னை மழை-நார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது?- வீடியோ

  • 7 years ago
புதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் முடிச்சூர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.சென்னையில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Norway Meteorological center said Rain will not be there in Chennai from Wednesday. Today and tomorrow some places of Chennai will get heavy rain sometime

Recommended