சுட்டுப்புடுவேன் - மிரட்டல் விடுத்த தொழிலதிபர் கைது- வீடியோ

  • 7 years ago
காரை சேதப்படுத்தியவரை தொழிலதிபர் ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிகுமார். தொழிலதிபரான இவர் வீட்டில் இருந்து காரில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது ஜோதி குமாரின் காருக்கு பின்னால் மாதவன் என்பவர் காரை ஓவர்டேக் செய்ய முயன்றபோது எதிர்பாராதா விதமாக விபத்துக்குள்ளானது. இதில் ஜோதிகுமாரின் கார் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதி குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாதவனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dis : Businessman angrily threatens to kill a car

Recommended