சென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன?-வீடியோ

  • 6 years ago
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரவில் மட்டும் ஏன் கன மழை பெய்கிறது என்ற கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பதில் அளித்தார்.
நேற்று பகலில் சென்னையில் வானம் வெறிச்சோடி கிடந்தது. சூரியன் சுள்ளென சுட்டது. ஆனால் இரவில் கன மழை கொட்டியது. அதிகபட்சமாக மைலாப்பூரில் 30 செ.மீ மழை பெய்தது.
அதேபோல இன்று பகலிலும் வானம் தெளிவாக காணப்பட்டது. ஆனால் இரவில் ஆங்காங்கு மழை பெய்ய தொடங்கியுள்ளது.இந்த கணிக்க முடியாத வானிலை நிலவரம் குறித்து ரமணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பதற்கும் புயல் என்பதற்கும் முக்கிய வேறுபாடு என்பதே இதுதான்.புயல் உருவானால் அது கரையை கடக்கும் வரை மழை இருக்கும். ஒன்றரை நாளில் புயல் கரையை கடந்துவிடும். அதன்பிறகு புயல் கரையை கடந்த இடத்தில் வானம் தெளிவாக இருக்கும். இயல்பு நிலை உடனே திரும்பிவிடும்.

Why rain lashes at the night times in Chennai, here is the answer which is given by Ramanan.

Recommended