தீக்குளிப்பு சம்பவம்! மூன்று பேர் கைது-வீடியோ

  • 7 years ago
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசியை அடுத்த காசி தர்மத்தை சேர்ந்தவராவர். காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளித்தனர். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிலர் வீடியோக்களை எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மனிதாபிமானமுள்ள பலர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும், தீ குளித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

100 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் குழந்தைகள் மதி சரண்யா,அட்சயா பரணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

3 persons arrested after 3 person passed away by $elf-imm0lation in Nellai collector office on Monday.

Recommended